Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரயில்வே நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு ஓவியம்

செப்டம்பர் 25, 2019 03:59

சென்னை: சென்னை கொரட்டூர் டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை இந்தியா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியங்களை இரயில்வே நிலைய சுவர்களில் வரைந்தனர்.


பாரதப் பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டம் தமிழக முதல்வர் அறிவித்த பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பல்வேறு அமைப்பினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை கொரட்டூர் டாக்டர் நல்லிகுப்புசாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும் சுகாதாரமாக இருப்பது குறித்தும் சாலை விதிகளை மதித்து நடப்பது உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை ஆயிரக்கணக்கான கூடும் இடமான ரயில்வே நிலையத்தில் வரைந்தனர்.

தலைப்புச்செய்திகள்